Author Archive

புது வருடமும், முஸ்லிம்களும்!

Sunday, December 30th, 2012

newyearவரும் திங்கட் கிழமை இரவு 12 மணியுடன் 2012 நிறைவடைந்து 2013-01-01  புது வருடம் பிறக்கின்றது.

புது வருடத்தை வரவேற்பதற்காக கிறிஸ்தவ உலகம் தயாராகின்றது, ஏனைய சமூகங்கள் தயாராகின்றன என்றால் அதில் வியப்பேதும் இல்லை. ஆனால் இஸ்லாமிய உலகும் தயாராகின்றது என்றால் அதை விட வேதனை வேறு என்ன இருக்க முடியும்!?

தனது வாழ்நாளில் ஒரு வருடம் குறைந்து விட்டதற்காக அதை மகிழச்சியுடன் கொண்டாடுவது என்பது ஒரு விதத்திலும் அறிவுப் பூர்வமான விடயமாக இருக்க முடியாது. மறாக தனது வாழ்நாளில் ஒரு வருடம் குறைந்து விட்டதே என்று கவலைப்பட்டு, அதைப் பின்னோக்கிப் பார்த்து தனது கடந்த வருடத்தின் குறை நிறைகளை சரி செய்து அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்ற ஒரு அடியானாக தன்னை எவ்வாறு மாற்றிக் கொள்வது என்பதைப் பற்றி சிந்திப்பவனே உண்மையான புத்திசாலியாக இருக்க முடியும்.   இஸ்லாமிய வரலாற்றில் மிகப் பெரிய எழுச்சியையும், புரட்சியையும் ஏற்படுத்திய (more…)

மார்க்கத் தீர்ப்புகள் – கேள்வி 15: கிறிஸ்தவர்களின் பண்டிகையான கிறிஸ்மஸ் பெருநாள் தினத்தில் அவர்களை வாழ்த்தலாமா? அவர்கள் வாழ்த்தும் போது நாம் எவ்வாறு அதற்கு பதில் கூறுவது? இவர்கள் இந்தப் பெருநாளை முன்னிட்டு நடந்தும் விழாக்களில், நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியுமா?

Tuesday, December 25th, 2012

‘நத்தார் பண்டிகை’ அல்லது ‘கிறிஸ்மஸ்’ (Christmas) தின வாழ்த்து தொடர்பாக அஷ்ஷைக் ஸாலிஹ் அல்-உஸைமீன் (ரஹ்) அவர்கள் வழங்கிய தீர்ப்பு:  

கேள்வி: கிறிஸ்தவர்களின் பண்டிகையான கிறிஸ்மஸ் பெருநாள் தினத்தில் அவர்களை வாழ்த்தலாமா? அவர்கள் வாழ்த்தும் போது நாம் எவ்வாறு அதற்கு பதில் கூறுவது? இவர்கள் இந்தப் பெருநாளை முன்னிட்டு நடந்தும் விழாக்களில், நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியுமா? மேற் சொன்னவைகளில் எதையாவது ஒன்றை எந்த நோக்க முமின்றி செய்தால் குற்றமாகுமா? அவன் வெளிப்படையாகவோ, அல்லது ஒரு தர்மசங்கடமான நிலையிலோ, அல்லது வெட்கத்தின் காரணமாகவோ, அல்லது வேறு ஏதாவது ஒரு காரணத்திற்காகவோ அவர்களுடன் இதில் ஒப்பாக செயல்பட முடியுமா? (more…)

ஓர் இளம் பெண்ணின் அழகிய இறுதி முடிவு!

Friday, December 14th, 2012

92940

ஓர் இளம் வயதுப் பெண்ணின் அழகிய இறுதி முடிவைப் பாருங்கள்!

ஸப்க் என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஹிஜ்ரி 1433-8-26 ல் வெளியான செய்தி.

ரியாத் பகுதியில் நடந்த நெகிழவூட்டும் சமப்வம்!:

இருபது வயதே நிறைந்த இளம் பெண் ஸுஜுதில் இருக்கும் போது இவ்வுலகத்தை விட்டு பிரிந்த நிகழ்வு அனைவரையும் நெகிழ்வூட்டக்கூடியதாகும். அவரது கணவர் “நன்மையை ஏவி தீமையைத்தடுக்கும் ஆணையத்தில்” பணிபுரிகின்றார் அவருக்கு தனது மனைவியின் இத்திடீர் பிரிவு கடும் திடுக்கத்தை ஏற்படுத்தியது. (more…)

நற்குணங்களின் பிறப்பிடம்!

Friday, December 14th, 2012

இவர்தான் உங்கள் முன்னோடி!

இவர்தான் உங்கள் முன்மாதிரி!

இவர்தான் உங்கள் வழிகாட்டி!

இவர்தான் உங்கள் கண்குளிர்ச்சி!

இவர்தான் உங்கள் உயிரிலும் மேலான தலைவர்!

வாருங்கள் இந்த உத்தம தலைவரின் நறுமணங்கமழும் வாழ்வில் பக்கங்களிலிருந்து சில துளிகளை அன்னாரது சம கால  தோழர்கள் வர்ணிப்பததை படிப்போம்: (more…)

மார்க்கத் தீர்ப்புகள் – கேள்வி 14: தனக்கு மறைவான ஞானம் இருப்பதாக வாதிடுபவனின் சட்டமென்ன?

Saturday, November 3rd, 2012

எவன் தனக்கு மறைவான ஞானம் இருப்பதாக வாதிடுகின்றானோ அவன் ஒரு நிறாகரிப்பாளனாகவே கருதப்படுவான். ஏனெனில் அவன் அல்லாஹ்வின் வார்த்தையை பொய்பித்தவன். அல்லாஹ் கூறுகின்றான்:

(நபியே) நீர் கூறுவீராக: ‘அல்லாஹ்வைத் தவிர வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவானவற்றை அறிய முடியாது, இன்னும்: (மரித்தோர் இறுதியில்) எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்.’ (அல்குர்ஆன் 27:55). (more…)

தொழுகையாளிகளே உங்களுக்காக காத்திருக்கும் நற்பாக்கியங்கள்!

Saturday, November 3rd, 2012

‘பிலாலே! தொழுகைக்காக இகாமத்துச் சொல்லும்; தொழுகையை நிறைவேற்றுவதன் மூலம் தான் நாம் மன நிம்மதி பெறுகின்றோம்’ (அபூதாவுத்).

இது நமது உயிரிலும் மேலான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வார்த்தைகளாகும். உண்மையில் முஃமினுக்கு தொழுகையில் தான் மன நிம்மதி இருக்கின்றது என்பதை இந்தக் கூற்று உறுதி செய்கின்றது. ஆனால் இன்றைய நமது தொழுகைகளையின் நிலையை கொஞ்சம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். (more…)