தியாகப் பெண்மணிக்கு கிடைத்த பரிசு

அன்று: –

ஏக இறைவனை ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்துக்காக தன் கண் முன்னால் ஒன்றன் பின் ஒன்றாக தன்னுடைய நான்கு குழந்தைகளையும் கொதிக்கும் எண்ணெய் கொப்பரையில் போட்டு வறுத்தெடுத்த கொடுமையைக் கண்ட பிறகும் ஏக இறைக்கொள்கையை விடாத தியாகச் செம்மல்! நான்கு குழந்தைகளையும் கொப்பரையில் வறுத்தெடுத்த பின்னர் அந்த கொடுங்கோலன் தாயையும் அதே கொப்பரையில் வறுத்தெடுக்கிறான்!

ஏக இறைக் கொள்கையை ஏற்றுக்கொண்டதற்காக சவுக்கால் அடிக்கப்பட்டு சதைகள் பிய்தெடுக்கப்பட்ட கொடுமை! அந்நிலையிலும் இறைவனிடம் “சுவர்க்கத்தில் தமக்காக ஒரு மாளிகையை எழுப்புமாறு பிரார்த்தனை செய்கிறார் மற்றொரு தியாகச் செம்மல்! இறைவன் சுவர்கத்தின் மாளிகையை அந்தப் பெண்மணிக்கு காட்டுகிறான்! அதைக் கண்டவராக புன்முறுவல் பூத்தவராக சவுக்கடியை ஏற்றுக்கொள்கிறாள் அந்தப் பெண்!

இன்று: –

(சமீபத்தில் சவூதி அரேபியாவில் நடந்த உண்மைச் சம்பவம்)

இந்த இரண்டு சரித்திர உரையைக்் கேட்ட இஸ்லாமிய நெறி தவறி வாழ்ந்த ஒரு பெண் கதறியழுதவராக முகம் கருத்தவராக துடிதுடிக்கிறார். அருகிலிருந்தவர்கள் ஷஹாதா கலிமா மூன்று முறை சொல்லிக் கொடுக்க  அதைச் சொல்ல அவரால் இயலவில்லை! மாறாக அவர் கூறுகிறார், “அல்லாஹ் மீது சத்தியமாக நரகத்தில் எனது இடத்தைப் பார்க்கிறேன்” எனக் கூறியவராக மூச்சைவிடுகிறார்.

நிகழ்ச்சி : வாராந்திர பயான் நிகழ்ச்சி

நாள் : 23-04-2008

இடம் : அல்-கஃப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், சவூதி அரேபியா

ஆடியோ : Download {MP3 format -Size : 10.13 MB}

வீடியோ : (Download) {FLV format – Size : 103 MB}

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

By மௌலவி M.J. முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்)

அழைப்பாளர், அல்கப்ஜி தஃவா சென்டர், சவூதி அரேபியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed