சொர்க்கத்தின் இன்பங்கள் – பகுதி 2

நிரத்தரமான மறுவாழ்வு: –

இந்த உலகத்தின் சுகபோகங்கள் நிலையற்றவை. ஆனால் மறு உலகத்தின் சுகங்களோ எப்போதும் நீடித்திருக்கிற, நிலையான ஒன்றாகும். இந்த உலகத்தில் மனிதன் அடையக்கூடிய சுகங்கள் சிறிது காலத்திற்கோ அல்லது சலிப்படையச் செய்யக் கூடியதாகவே உள்ளது. ஆகையால் வேறு ஒரு நல்ல சுகத்தை தேட முயற்சி செய்கிறான். ஆனால் மறு உலகத்தில் உள்ள சுகங்கள் எப்போதும் நிலைத்திருக்கிற, ஒருபோதும் சலிப்படையக் கூடியதாக இருக்காது.

அல்லாஹ் கூறுகிறான்: –

‘உங்களுடைய கைகளை(ப் போர் செய்வதினின்றும்) தடுத்துக் கொண்டும், தொழுகையை நிலைநிறுத்தியும்,  ஜக்காத்தை கொடுத்தும் வருவீர்களாக!’ என்று எவர்களுக்குக் கூறப்பட்டதோ அவர்களை (நபியே!) நீங்கள் பார்க்கவில்லையா? பின்னர், போர் செய்ய வேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்ட போது,  அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வுக்குப் பயப்படுபவதைப் போல் அல்லது அதைவிட அதிகமாகவே மனிதர்களுக்குப் பயப்பட்டு ‘எங்கள் இறைவனே! எங்கள் மீது ஏன் (இப்) போரை விதியாக்கினாய்? சிறிது காலம் எங்களுக்காக இதைப் பிற்படுத்தியிருக்கக் கூடாதா? என்று கூறலானார்கள். (நபியே!) நீர் கூறுவீராக:

‘இவ்வுலக இன்பம் அற்பமானது, மறுவுலக(இன்ப)ம், பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது நீங்கள் எள்ளளவேனும் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள்.’ (அல்-குர்ஆன் 4:77)

பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவனபதியின் தன்மையானது – அதன் கீழே நீர் அருவிகள் (என்றென்றும்) ஓடிக் கொண்டிருக்கும். அதன் ஆகாரமும், அதன் நிழலும் நிலையானவை. இது தான் பயபக்தியுடையோரின் முடிவாகும். காஃபிர்களின் முடிவோ (நரக) நெருப்பேயாகும். (அல்-குர்ஆன் 13:35)

உங்களிடம் இருப்பவை எல்லாம் தீர்ந்துவிடும். அல்லாஹ்விடம் இருப்பதே (அழியாது என்றென்றும்) நிலைத்திருக்கும் – எவர்கள் பொறுமையுடன் (கஷ்டங்களைச்) சகித்துக் கொள்கிறார்களோ, அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம். (அல்-குர்ஆன் 16:96)

‘நிச்சயமாக இவை நம்முடைய கொடையாகும். இதற்கு (என்றும்) முடிவே இராது’ (என்று அவர்களுக்குக் கூறப்படும்). (அல்-குர்ஆன் 38:54)

உன்னதமான மகிழ்ச்சி: –

சொர்க்கவாசிகளின் சந்தோஷங்களான, அவர்களின் உடைகள், உணவு, குடிபானங்கள், ஆபரணங்கள் மற்றும் மாளிகைகள் எல்லாம் மிக உன்னதமாக இருக்கும். அவற்றை இந்த உலகத்தோடு ஒப்பீடு செய்யவே முடியாது.

சொர்க்கத்தில் ஒருவர் தலை வைத்து வணங்கக் கூடிய இடமானது, இந்த உலகத்தில் சூரியன் உதிக்கும் எல்லா இடத்தையும் விட சிறந்ததாக உள்ளது என்று முஹம்மது நபி (ஸல்) கூறினார்கள். (மிஷ்காத்)

அசுத்தங்களில் இருந்து விலகி இருத்தல்: –

சொர்க்கம், இந்த உலகத்தின் அசுத்தங்களில் இருந்து மாறுபட்டிருக்கிறது. இந்த உலகத்தில் நாம் சாப்பிட்டாலோ அல்லது குடித்தாலோ அது தேவையில்லாத அசுத்தத்தை வெளியேற்றக் கூடியதாக இருக்கிறது. இந்த உலகத்தில் மதுபானம் குடித்தால் தன்னை மறந்து விடுவான். பெண்களுக்கு மாத விலக்காகிறது, குழந்தை பிறக்கிறது. அது அவர்களுக்கு வேதனையை உண்டாக்குகிறது. சொர்க்கமானது இது போன்ற மன நிம்மதியின்மையில் இருந்து வேறுபட்டுள்ளது.

சொர்க்கத்தில் மது: –

(அது) மிக்க வெண்மையானது அருந்துவோருக்கு மதுரமானது. அதில் கெடுதியும் இராது அதனால் அவர்கள் புத்தி தடுமாறுபவர்களும் அல்லர். (அல்-குர்ஆன் 37:46-47)

சொர்க்கத்தில் தண்ணீர் மற்றும் பால்: –

பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன; இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தில் எவன் என்றென்றுமே தங்கியிருந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா? (அல்-குர்ஆன் 47:15)

சொர்க்கத்தில் உள்ளவர்கள் அசுத்தங்களை எவ்வாறு வெளியாக்குவார்கள் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது: “அவர்களின் தோலின் வழியாக வியர்வை வெளியாகும் அது கஸ்தூரியின் வாசனையைப் போன்று இருக்கும். அனைவருடைய வயிரும் மெலிந்ததாக இருக்கும்” என்று கூறினார்கள் (இப்னு ஹப்பான்)

இங்கே சொல்லப்பட்ட உவமானங்கள் எல்லாம் நாம் சொர்க்கத்தின் தன்மையைப் பற்றி புரிந்து கொள்வதற்காக. ஆனால் அதன் உண்மையான சந்தோஷத்தை இறைவன் மறைத்து வைத்துள்ளான்.

“அவர்கள் செய்த (நற்) கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது” (அல்-குர்ஆன் 32:17)

சொர்க்கத்துக்கு உவமனம் ஏதுமில்லை: –

சொர்க்கத்தின் சந்தோஷங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்டது. நாம் எவ்வளவு தான் முன்னேறி இருந்தாலும், மனிதர்களால் அதைப்பற்றி அறிந்துகொள்ள முடியாது. பிரகாசிக்கும் விளக்குகள், நறுமனம் வீசும் தாவரங்கள், உயர்ந்த மாளிகைகள், ஓடக் கூடிய ஆறுகள், கனிந்த பழங்கள், அழகான மனைவி, அதிகமதிகமான உடைகள் அழகாக கட்டப்பட்ட உயர்ந்த வீடுகள் (இப்னு மாஜா)

சொர்க்கத்தின் வீடுகளைப்பற்றி முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது தங்கம், வெள்ளியிலான செங்கல், கஸ்தூரியின் கலவை, முத்து பவளங்களின் கற்கள், குங்குமபூவின் மணல் அதில் உள்ளே நுழைபவர் சந்தோஷத்தை தவிர வேறு எதுவும் அடையமாட்டார். இறப்பு என்பதே கிடையாது. அவர்களுடைய ஆடைகள் கிழிந்து போகாது எப்போதும் இளமையுடன் இருப்பார்கள். (அஹமது)

அல்லாஹ் கூறுகிறான்: –

அன்றியும், (அங்கு) நீர் பார்த்தீராயின், இன்ப பாக்கியங்களையும், மாபெரும் அரசாங்கத்தையும் அங்கு காண்பீர். (அல்-குர்ஆன் 76:20)

அவர்கள் செய்த (நற்) கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது. (அல்-குர்ஆன் 32:17) இறைவன் கூறியுள்ள விஷயங்கள் குறைந்தது தான். அவன் கூறாத விஷயங்கள் இன்னும் அதிகம் உள்ளது (முஸ்லிம்)

சுவர்க்கத்தைப் பற்றியும் அதனுடைய சந்தோசத்தைப் பற்றியும் இறைவனும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களும் கூறியவைகளை இன்னொரு கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம். (இன்ஷா அல்லாஹ்)

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

By சகோதரர் M. அன்வர்தீன்

வசிப்பிடம் :அல்-கப்ஜி, சவூதி அரேபியா; தாயகம்: புது ஆத்தூர், தமிழ் நாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed