அச்செடு!
மின்னஞ்சல் அனுப்பு
106 views சகோதரத்துவத்திற்கு எடுத்துக்காட்டாக ஒரு அசாதாரண நிகழ்ச்சி!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:M. அன்வர்தீன் on 29th June 2008
யர்மூக் யுத்தத்தின் போது நான் என்னுடைய உறவினர் ஒருவரை கண்டுபிடிப்பதற்காகச் சென்றேன். என்னுடன் ஒரு தோல் பையில் தண்ணீர் மட்டும் இருந்தது. என்னுடைய உறவினர் உயிருடன் இருந்தால் இந்த தண்ணீரைக் கொண்டு அவருடைய தாகத்தைத் தனிக்கலாம் என்றும் மேலும் அவருடைய முகத்தில் உள்ள புழுதியைக் கழுவலாம் என்றும் நான் எனக்குள் நினைத்துக் கொண்டேன்.
அப்போது திடீரென நான் அவரை கண்டுகொண்டேன். அந்த சமயத்தில் அவர் சுய நினைவை இழந்தவராகவும் பின்னர் சுய நினைவை மீண்டவராகவும் இருந்தார். நான் உங்களுக்கு தண்ணீர் புகட்டட்டுமா? என்று அவரிடம் கேட்ட போது அவர் தலையை ஆட்டினார். திடீரென வேறு ஒருவர் தன்னுடைய காயத்தின் காரணமாக வலியினால் கூப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது வலியால் துடித்துக்கொண்டிருந்த என் உறவினர் மற்றவரை கவனிக்குமாறு எனக்கு சைகை காட்டினார். நான் அவரிடம் சென்றபோது அவர் அம்ர் பின் ஆஸின் சகோதரர் ஹிஸாம் என்பதை பார்த்தேன். நான் உங்களுக்கு தண்ணீர் புகட்டட்டுமா என்று கேட்டேன். அப்போது திடீரென்று வேறு ஒருவர் அவருடைய காயத்தின் வலியின் காரணமாக கூப்பிட்டுக் கொண்டிருந்ததை நாங்கள் கேட்டோம். ஆகையால் அவரை சென்று கவனிக்குமாறு அவர் என்னிடம் சைகை செய்தார்.
நான் அவரிடம் சென்ற போது அவர் இறந்திருந்தார். நான் ஹிஸாமிடம் திரும்பிச் சென்ற போது அவரும் இறந்திருந்தார். பின்னர் நான் என் உறவினரிடம் சென்ற போது அவரும் இறந்திருந்ததைப் பார்த்தேன்.
ஆகையால் அனைவருமே ஒருவர் மற்றவரின் மேல் உள்ள அன்பின் காரணமாக தன்னுடைய தாகத்தை தணிக்காமலேயே மரணமடைந்து விட்டனர். இது தான் மனித வரலாற்றில் ஓர் ஈடு இணையற்ற தியாகம் மற்றும் சகோதரத்துவத்தின் ஆதாரமாக இருக்கிறது.
இந்த அற்புத சரித்திர நிகழ்ச்சி இப்னு ஹஜர் (ரஹ்) அவர்களின் ‘அல்-இஸாபாஹ்’ என்ற நூலிலும், இப்னு அல்-முபாரக் (ரஹ்) அவர்களின் ‘அல்-ஜிஹாத்’ என்ற நூலிலும், அப்துல்லா பின் அல்-முபாரக் (ரஹ்) அவர்களின் ‘அஜ்-ஜூஹத்’ என்ற நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் அறிவிப்பாளர்கள் அனைவருமே நம்பகமானவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்.
நன்றி : www.turntoislam.com
தொடர்புடைய ஆக்கங்கள்:
அச்செடு!
மின்னஞ்சல் அனுப்பு
106 views
June 29, 2008
பிரிவு: வரலாறு



உங்களின் கருத்தை பதிவு செய்யுங்கள்