| Home |  Contact Us | RSS FEED |

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 151 views

கிறிஸ்தவம் Vs இஸ்லாம் – பெண்ணுரிமை பகுதி : 5 பெண்களின் வாரிசுரிமை

எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 6th July 2008

பெண்களின் வாரிசுரிமை குறித்து பைபிள்: -

மேலும் நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: ஒருவன் குமாரன் இல்லாமல் மரித்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் குமாரத்திக்குக் கொடுக்கவேண்டும்.  (எண்ணாகமம், 27 வது அதிகாரம், 8 வது வசனம்)

பைபிளின் இந்த வசனத்தின் படி, மரணித்த ஒருவருக்கு ஆண் மகன் இருந்தால் அவருடைய சொத்தில் மரணித்தவரின் மனைவிக்கோ அல்லது மகளுக்கோ எவ்வித உரிமையும் இல்லை. ஆண் மகன் இல்லையென்றால் மட்டுமே மகளுக்கு சொத்துரிமை உண்டு என கூறுகிறது.

இனி அல்-குர்ஆன் என்ன கூறுகிறது என பார்ப்போம்!

பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்கு பாகமுண்டு; அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகமுண்டு – (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே; (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும். (அல்-குர்ஆன் 4:7)

மேலும் இஸ்லாமிய மார்க்கத்தில் ஒரு பெண்ணுடைய சொத்து அவளுக்கு மட்டுமே உரியது. அவளுடைய சொத்திலிருந்து கனவனையோ அல்லது அவனுடைய குழந்தைகளையோ பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் மனைவியையும், அவனுடைய குழந்தைகளையும் காக்கும் முழு பொறுப்பும் கனவனையே சாரும். மேலும்  கனவனின் சொத்தில் அவளுக்கும், அந்த கனவன் மூலமாக பெற்றெடுத்த அவளுடைய குழந்தைகளுக்கும் உரிமையுள்ளது.

நடுநிலையான கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் பெண்களுக்கு வாரிசுரிமை அளிக்கும் மார்க்கம் எது என சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.

தொடர்புடைய ஆக்கங்கள்:

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 151 viewsJuly 6, 2008   பிரிவு: இயேசு கிறிஸ்து, மதங்கள் ஒப்பாய்வு

1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading ... Loading ...