| Home |  Contact Us | RSS FEED |

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 127 views

ஸஜ்தா திலாவத் செய்தல்!

எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 8th January 2009

அல்-குர்ஆனில் ஸஜ்தாவுடைய வசனங்களை ஓதும் போது ஸுஜுது செய்வது சுன்னத்தாகும். தொழுகையின் போதும், தொழுகையல்லாத இடங்களிலும் ஸ்தாவுடைய வசனங்களை ஓதும் போது நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தா திலாவத் செய்திக்கிறார்கள்.

தொழுகையில் ஸஜ்தாவுடைய வசனங்களை ஓதும் போது அல்லாஹு அக்பர் என்று தக்பீர் கூறியவாறு ஸுஜுதுக்கு சென்றுவிட வேண்டும். பின்னர் மீண்டும் தக்பீர் கூறி எழுந்து நின்று விட்ட இடத்திலிருந்து குர்ஆனை ஓதவேண்டும். ஜமாத்தாக தொழும் போது இமாம் ஸஜ்தா திலாவத் செய்யும் போது அவருடன் நாமும் செய்ய வேண்டும்.

தனியாக குர்ஆன் ஓதும்போது ஸஜ்தாவுடைய வசனங்கள் வந்தால் அப்படியே “அல்லாஹு அக்பர்” என்று கூறி ஸுஜுதுக்கு சென்று விடவேண்டும். ஸுஜுதிலிருந்து எழும்போது தக்பீர் கூறவேண்டிய அவசியம் இல்லை. மேலும் பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்துப்படி ஸஜ்தா திலாவத் செய்வதற்கு உளூவுடன் இருக்கவேண்டிய அவசியமில்லை.

ஸஜ்தா திலாத்தின் போது நாம் வழக்கமாக ஸுஜுதில் ஓதக் கூடிய துஆக்களையே ஓதலாம்.

அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்.

தொடர்புடைய ஆக்கங்கள்:

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 127 viewsJanuary 8, 2009   பிரிவு: அல்-குர்ஆன், தொழுகை

1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading ... Loading ...

உங்களின் கருத்தை பதிவு செய்யுங்கள்

click to changeSecurity Code