| Home |  Contact Us | RSS FEED |

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 162 views

தொழுகையின் கடமை மற்றும் வாஜிபுகள்!

எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 8th January 2009

தொழுகையின் ருகுன்கள் (முதல் நிலைக் கடமைகள்): -

1) சக்தியுள்ளவன் நின்று தொழுவது

2) தக்பீரத்துல் இஹ்ராம் என்ற ஆரம்ப தக்பீர் கூறுவது

3) ஒவ்வொரு ரக்அத்திலும் சூரத்துல் பாத்திஹா ஓதுதல்

4) ருகூவு செய்தல்

5) ருகூவுக்குப் பின் நேராக நிற்பது

6) ஏழு உறுப்புகள் தரையில் படுமாறு ஸஜ்தா செய்தல்

7) ஸஜ்தாவிலிருந்து எழுவது

8.) இரண்டு ஸஜ்தாக்களிடையில் அமர்தல்

9) அனைத்து செயல்களையும் நிதானமாக செய்தல்

10) கடைசி அத்தஹிய்யாத்திற்காக அமர்வது

11) கடைசி இருப்பில் அத்தஹிய்யாத்து ஓதுதல்

12) கடைசி இருப்பில் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து ஓதுதல்

13) இரண்டு ஸலாம்கள் கூறுவது

14) கடமைகளை ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக செய்தல்

தொழுகையின் வாஜிபுகள் (இரண்டாம் நிலைக் கடமைகள்): -

1) தக்பீர் தஹ்ரிமா தவிர உள்ள ஏனைய தக்பீர்கள்

2) இமாமும், தனித்து தொழுபவரும் “ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதாஹ்” கூறுவது

3) ருகூவிலிருந்து எழுந்ததும் “ரப்பனா லகல் ஹம்து” கூறுவது.

4) ருகூவில் “ஸுப்ஹான ரப்பியல் அளீம்” கூறுவது

5) சுஜுதில் “சுப்ஹான ரப்பியல் அஃலா” கூறுவது

6) இரு ஸஜ்தாக்களிடையில் “ரப்பிஃக்ஃபிர்லி” கூறுதல்

7) நடு இருப்பில் அத்தஹிய்யாத் ஓதுதல்

8.) நடு இருப்பு இருத்தல்

தொடர்புடைய ஆக்கங்கள்:

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 162 viewsJanuary 8, 2009   பிரிவு: தொழுகை

1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading ... Loading ...