| Home |  Contact Us | RSS FEED |

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 354 views

தொழுகையின் போது காற்றுப் பிரிந்ததாக சந்தேகம் ஏற்பட்டால் என்ன செய்வது?

எழுதியவர்/பதிந்தவர்/உரை:சகோதரர் M. அன்வர்தீன் on 9th March 2009

உளூவை முறிக்கும் அனைத்துக் காரியங்களும் தொழுகையை முறித்து விடும். அந்த வகையில் பின் துவாரத்தின் வழியே காற்றுப் பிரிந்தால் தொழுகையும் முறிந்து விடும். ஆனால் ஒருவர் தம்முடைய பின் துவாரத்தின் வழியே காற்றுப் பிரிந்து விட்டது என்று உறுதியாக தெரிந்தால் மட்டுமே அவர் தொழுகையை விட வேண்டும். சந்தேகமாக இருந்தாலோ அல்லது உறுதியாக தெரியாமல் இருந்தாலோ அல்லது காற்றின் சப்தத்தைக் கேட்காத வரை அல்லது அதன் வாடையை உணராத வரை தொழுகையை விடத் தேவையில்லை.

நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அபூஹூரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: -

‘ஒருவர் தொழுகையில் இருக்கும் போது பின் துவாரத்தின் வழியே காற்றுப் பிரிந்து விட்டது என்ற சந்தேகம் வந்தால், அவர் காற்றின் சப்தத்தையோ அல்லது அதன் துர்வாடையையோ உணராத வரையில் தொழுகையை விடத் தேவையில்லை’

மேலும் இது ஷைத்தானின் ஊசலாட்டங்களை நீக்கும் முக்கிய அம்சமாகும்.

ஆதாரம் : அபூதாவுது மற்றும் ஸஹீஹ் அல் ஜாமிவு.

தொடர்புடைய ஆக்கங்கள்:

அச்செடு! அச்செடு! மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 354 viewsMarch 9, 2009   பிரிவு: கேள்வி/பதில்-பொதுவானவை, தொழுகை

1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading ... Loading ...

உங்களின் கருத்தை பதிவு செய்யுங்கள்

click to changeSecurity Code