மழலை மொழி – கவிதை

இனிய மொழி
என் சின்னக் குழந்தைகளின்
மழலை மொழி!

இலக்கியம் இல்லா இன்னிசை!
இலக்கணமற்ற தேன் மழை!
அறுந்தறுந்து விழும் அழகிய கவிதை!

எல்லோரும் விரும்பும் கவிதை
அது – சின்னஞ் சிறுசுகளின்
சிங்காரச் சரிதை!

ஆக்கங்கள் அனைத்திலும்
களிப்புக்களுண்டு.
களிப்புக்கேயுறிய ஆக்கம்தானே
கண்மனிகளின் கவிதைகள்!

மரபுக் கவிதையுமன்று – அவை
பூரிக்க வைக்கும் புதுக் கவிதையுமன்று!
சின்னஞ் சிறுசுகளின் சிறிப்புக்கள்
இன்பம் தரும் இயற்கைக் கவிதை!

அர்த்தமற்ற அந்த வார்த்தைகளுக்கு
அவரவர்கள் தரும் அர்த்தங்கள்
பேஷ்..! பேஷ்!

மழலை மொழி பேச
எனக்கும் ஆசைதான் – ஆனால்
நீங்கள் ஏற்கமாட்டீர்கள்!
ஏசுவீர்கள், ஏளனம் பேசுவீர்கள்
ஏனக்கேனிந்த வம்பு.

அதோ ஒரு குழந்தை அழுகின்றது
அது – சின்னக் குழந்தையின்
சினுக்கள் கீதம்!

அவன் சிரிப்பு
சில்லறைக் காசுகளாய்
உதிரும் போதெல்லாம் – என் கவலைகளும்
உதிர்ந்து போகும்!

மழலைச் செல்வத்துக்காய்
ஏங்கும் இதயங்கள் ஏராளம்.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

By மௌலவி M.J. முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்)

அழைப்பாளர், அல்கப்ஜி தஃவா சென்டர், சவூதி அரேபியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed