கோர வேட்டை – கவிதை

கோர வேட்டை தான்டவமாடும்
கொடூர நாட்கள் – நம்மை
கொஞ்சம் கொஞ்சமாய் சல்லடை போடுகின்றன!

பாலஸ்தீன மண்ணின் மைந்தகளை
பச்சை பச்சையாய் நிரந்தர பள்ளிக்கு
பல்லக் கேற்றுகிறது – இஸ்ரேலியக் கரடிகள்!

காஸாவின் விடியல் கீற்றுகள்
கண்சிமிட்டுவதை – உலகம்
கண்டு கொள்ளும் தருணம் -இன்னும்
தொலைவில் இல்லை…

நேசக் கரங்கள் உயரும் போதெல்லாம்
அங்கே – ஒரு இறை படையொன்று
அனிவகுத்துக் கொண்டிருக்கின்றது – அவை
இறைவனின் அனுமதிக்காய் காத்துக்கிடக்கின்றன!

நாளைய விடியலை நோக்கி
நகரட்டும் – நம் நகர்வுகள்
தகரட்டும் அந்நியக் கனவுகள்!

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

By மௌலவி M.J. முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்)

அழைப்பாளர், அல்கப்ஜி தஃவா சென்டர், சவூதி அரேபியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed