ஒற்றுமை – கவிதைகள்

உலகத்தாரின் குரல்கள் ஒலிக்கின்றன ஒற்றுமையாய்
நம் குரல்களும் ஒலிக்கின்றன – ஒற்றுமைக்காய்!
சாதித்தவர்கள் அவர்கள் – சருக்கி விழுந்தோர் நாம்தான்!!

பரிதவித்த ஓர் அப்பாவிச் சமூகமாய்
பாதாளத்தில் தள்ளிக் கொண்டிருக்கிறோம் – நம்மை
படித்த பாமரர்களாய் ஆகிவிட்டோம் படிப்படியாக!

என் சமூகத்திற்கு நேர்ந்ததென்ன?
என் சமூகம் ஏன் தற்கொலை செய்யப் பார்க்கின்றதா?!
நானும், நீங்களும் சமூகத்தின் அங்கத்தவர்கள்!!

என் சமூகமே!
உன் எதிர்காலம் செழிக்க
உனக்கு வேண்டும் இரு தகமைகள்:

1- இம்மையின் இன்னல்கள் அகல – ஒற்றுமையும்
2- மறுமையின் வளங்கள் செழிக்க – ஏகத்துவமும்.

இவ்விரண்டுக்கும் அர்ப்பணமாகட்டும் எம் எதிர்காலம்
சகோதரர்களே, கைகோர்ப்போம் நம் உருக்குலைந்த ஒற்றுமையை நிலைநாட்ட.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

By மௌலவி M.J. முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்)

அழைப்பாளர், அல்கப்ஜி தஃவா சென்டர், சவூதி அரேபியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed