Posts Tagged ‘அடிப்படைகள்’

முஸ்லிம்கள் அறிய வேண்டிய முக்கிய பாடங்கள் – Part 2 : இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகள்!

Monday, November 7th, 2011

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.

அன்பு சகோதர, சகோதரிகளே! இத்தொடரின் முன்னுரையில் இஸ்லாம் மட்டுமே இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மார்க்கம் என்றும் மற்ற மார்க்கங்களை எவர் விரும்பினாலும் அது நிராகரிக்கப்படும் என்பதை அறிந்தோம்.

நம்மில் வெகு சிலர் மார்க்கத்தைப் பற்றிய போதிய தெளிவின்மையால் மாற்றுமதக் கலாச்சாரங்களில் கவரப்பட்டு அதிலே ஈடுபடக் கூடியவர்களாக இருக்கின்றனர். இன்னும் சிலரோ நம்முடைய கஷ்டங்களை இறைவனிடம் முறையிட்டு விட்டோம் ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை என்று மாற்றுமத வழிபாட்டுத் தலங்களை நோக்கிச் செல்கின்ற அவலநிலையும் பத்திரிக்கையின் வாயிலாக படிக்க நேரிடுகின்றது. (more…)

முஸ்லிம்கள் அறிய வேண்டிய முக்கிய பாடங்கள் – Part 1 : இஸ்லாம் – இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே மார்க்கம் .

Sunday, November 6th, 2011

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.

இவ்வுலகில் இருக்கக்கூடிய ஜீவராசிகளிலே மிக உண்ணதமான ஜூவராசியாகிய மனிதனின் தோற்றம் குறித்து,  மனிதன் என்பவன் தானாகத் தோன்றியவன் என்றும், குரங்கிலிருந்து தோன்றினான் என்றும் இவ்வுலகில் இருக்கின்ற பற்பல மதங்களும், கொள்கைக் கோட்பாடுகளும் அவர்களின் கற்பனைக் கெட்டியவாறு பலவாறு கூறிக் கொண்டிருக்கின்றது. அதுபோலவே மனிதன் இவ்வுலகில் வாழ்வதற்கான அடிப்படை நோக்கத்தைப் பற்றியும் பலவாறாகக் கூறுகின்றது. (more…)

அல்லாஹ்வின் பெயர்களும் பண்புகளும்!

Sunday, May 16th, 2010

அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படை விதிகள்!

மூலம்: அஷ்ஷெய்க் முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உதைமீன் (ரஹ்)  

தமிழில்: முபாரக் மஸஊத் மதனி
 
அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகள் பற்றி அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படை விதிகள்:   (more…)

தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத்

Sunday, March 23rd, 2008

‘அஸ்மா” என்பதற்கு ‘பெயர்கள்’ என்று பொருள். ‘ஸிஃபாத்’ என்பதற்கு ‘பண்புகள்’ என்று பொருள். எனவே தவ்ஹீது அஸ்மா வஸ்ஸிஃபாத் என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரிய பெயர்களை, பண்புகளை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி அவனுடைய இந்தப் பெயர்களில், பண்புகளில் அவனுடைய படைப்பினங்களில் எதற்கும் யாருக்கும் இணைவைக்காமல் இருப்பதாகும். (more…)

தவ்ஹீதுல் உலூஹிய்யயா

Sunday, March 23rd, 2008

2. தவ்ஹீதுல் உலூஹிய்யயா (வணக்க வழிபாடுகளில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவுது) 

அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் அனைத்து வணக்கங்களையும் அல்லாஹ்வுக்கே செய்து அவனையே வணங்க வேண்டும் என்றும் நம்பிக்கை கொள்வதற்கு “தவ்ஹீதுல் உலுஹிய்யா” என்று பெயர்.

அல்லாஹ் மடடுமே இப்பேரண்டத்தை படைத்து, பரிபாலித்து உணவளித்துக் கொண்டிப்பவன் ஆகையால் அவன் மட்டுமே வணக்கத்திற்கு முழு தகுதியுடையவன் ஆவான். வணக்கம் என்பது அல்லாஹ்தஆலாவிற்கே முழு உரிமையுள்ள ஒன்றாகும். எனவே அவனுடைய படைப்பினங்களான நாம் அவனை மட்டுமே வணங்க வேண்டும். (more…)

தவ்ஹீதுர் ருபூபிய்யா

Tuesday, March 18th, 2008

1. தவ்ஹீதுர் ருபூபிய்யா (படைத்துப் பரிபாலிக்கும் இரட்சகனாகிய அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவது)

தவ்ஹீது ருபூபிய்யா என்பது: -

  • அனைத்துப் பொருட்களையும் அவைகள் ஒன்றுமே இல்லாமலிருந்தபோது உருவாக்கியவன் அல்லாஹ்வே
  • அவனே அனைத்துப் படைப்புகளுக்கும் அவைகளிடமிருந்து எந்தவித தேவைகளுமில்லாமல் உணவளித்து பாதுகாத்து வருபவன்
  • அவனே இந்தப் பேரண்டத்திற்கும் மற்றும் அதிலுள்ள அனைவருக்கும் ஒரே இறைவன்
  • அவனுடைய ஆட்சியதிகாரத்தில் யாருக்கும் எவ்வித பங்குமில்லை
  • அனைத்துப் பொருட்களுமே அல்லாஹ்வின் வல்லமையைக் கொண்டே இயங்குகிறது
  • அவன் அனுமதியில்லாமல் எதுவும் நடக்காது.

என்பன போன்ற அடிப்படைக் கொள்கையைக் கொண்டதாகும். அரபியில் படைத்துப் பரிபாலிக்கும் தன்மைக்கு “ருபூபிய்யா” எனப்படும். இது “ரப்” என்ற மூலச் சொல்லில் இருந்து உருவானது. (more…)