Posts Tagged ‘நபி’

படைப்பாளனின் இறுதிவேதம்!

Thursday, January 1st, 2009

படைப்பாளன் நீங்களா? இறைவனா? உங்களைப் படைப்பவன் அல்லாஹ்வே!

அகிலங்களின் இறைவனான அல்லாஹ் கூறுகிறான்: -

நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா? (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா? அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா? உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம்; எனவே நம்மை எவரும் மிகைக்க முடியாது. (அன்றியும் உங்களைப் போக்கி விட்டு) உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத உருவத்தில் உங்களை உண்டாக்கவும் (நாம் இயலாதவர்கள் அல்ல). முதல் முறையாக (நாம் உங்களைப்) படைத்தது பற்றி நிச்சயமாக நீங்கள் அறிவீர்கள் – எனவே (அதிலிருந்து நினைவு கூர்ந்து) நீங்கள் உணர்வு பெற வேண்டாமா? (அல்-குர்ஆன் 56:57-62) (more…)

இஸ்லாம் – முந்தைய இறைவேதங்கள் மீது நம்பிக்கை வைக்க கூறும் மார்க்கம்!

Sunday, July 20th, 2008

உலகில் உள்ள மதங்களில் முந்தைய இறைத்தூதர்களையும், அவர்களுக்கு அருளப்பட்ட வேதங்களையும் நம்ப வேண்டும் என வலியுறுத்தும் ஒரே மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் தான். இவ்வாறு நம்பிக்கை கொள்வது இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கைகளில் (ஈமான்) மிக முக்கியமானதாக இருக்கிறது. முந்தைய தீர்க்கதரிசிகளையும், அவர்களுக்கு அருளப்பட்ட வேதங்களையும் ஒருவர் நம்ப மறுத்தால் அவர் முஸ்லிமாக இருக்க முடியாது. (more…)

நரகத்தில் இருந்து மீட்சி அடைதல்! (Salvation from Hell fire!)

Monday, June 2nd, 2008

எவர்கள் நிராகரித்து, நிராகரிக்கும் நிலையிலேயே இறந்தும் விட்டார்களோ, அவர்களில் எவனிடமேனும் பூமி நிறைய தங்கத்தை தன் மீட்சிக்கு ஈடாக கொடுத்தாலும் (அதனை)அவனிடமிருந்து ஒப்புக் கொள்ளப் பட மாட்டாது. அத்தகையோருக்கு நோவினை மிக்க வேதனை உண்டு இன்னும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள். (அல்-குர்ஆன் 3:91) (more…)

மனித குலம் முழுமைக்குமான ஒரு தூதர்!

Sunday, June 1st, 2008

மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து சத்தியத்துடன் (அனுப்பப்பட்ட இத்)தூதர் உங்களிடம் வந்துள்ளார்; அவர் மீது ஈமான் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும்; ஆனால் நீங்கள் நிராகரிப்பீர்களானால், (இறைவனுக்கு எதுவும் குறைந்து விடாது, ஏனெனில்) நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை; அல்லாஹ்வே (யாவற்றையும்) நன்கறிந்தோனும், ஞானம் மிக்கோனும் ஆவான். (அல்-குர் ஆன் 4:170) (more…)

இஸ்லாம் மார்க்கத்துக்கு முன்னால் உள்ள மார்க்கங்களின் நிலை

Wednesday, May 21st, 2008

வானம், பூமி மற்றும் இவைகளுக்குகிடையே உள்ள எல்லாவற்றையும் படைத்தவன் ஒருவன் இருக்கிறான்  என்று உலகத்தில் உள்ள எல்லா மதங்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏக மனதாக  நம்பிக்கைக் கொண்டு இருக்கின்றன. எல்லாவற்றையும் படைத்த அந்த ஒரே ஒருவன் தான் நமக்கு நேர்வழி காட்டி நம்மை மோட்சம் அடைய செய்வதற்கு தகுதியானவனாக இருக்க முடியும். (more…)

இஸ்லாம் அறிமுகம் – அடிப்படை கேள்வி பதில்கள்

Friday, April 18th, 2008

இஸ்லாம் என்றால் என்ன?

இஸ்லாம் சொல்லிற்கு அமைதி (சாந்தி), சமாதானம், கீழ்படிதல் அல்லது கட்டுப்படுதல் அல்லது முழுமையாக அர்ப்பனித்தல் என்ற பொருளாகும். (more…)