பெண்கள் கப்றுகளை தரிசிப்பது பற்றிய இஸ்லாத்தின் தீர்ப்பு என்ன?

வெளியீடு: மேல் மட்ட அறிஞர் குழு ஸவுதி அரேபியா

தமிழாக்கம்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி

மார்க்கத் தீர்ப்புகள் – கேள்வி 04: பெண்கள் கப்றுகளை தரிசிப்பது பற்றிய இஸ்லாத்தின் தீர்ப்பு என்ன?

பதில் : பெண்களுக்கு கப்றுகளை தரிசிப்பது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறும் போது,

“கப்றுகளை தரிசிக்கும் பெண்களுக்கு சாபம் உண்டாவதாக!” அவர்களுக்கு அது குழப்பமாகும், அவர்களுள் பொறுமையுடன் இருப்பவர்கள் ஒரு சிலரே. அவர்களுக்கு கப்றுகளைத் தரிசிப்பதை தடை செய்தது அல்லாஹ்வின் கருணையை பிரஸ்தாபிக்கும் ஒரு செயலாகும். அவர்கள் குழப்பம் செய்வதிலிருந்தும், குழப்பத்தில் ஆழ்த்தப்படுவதை விட்டும் இது தடுக்கும். அல்லாஹ் அனைவருக்கும் அருள் புரிவானாக.

By மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி

அழைப்பாளர், அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-கோபார், சவூதி அரேபியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed