வழிதவறிய கொள்கைகள் – முன்னுரை

அகிலங்களின் ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.

பல கடவுள் வழிபாடுகளிலும், சிலை வணக்கங்களாலும், கடவுளுக்கு மனைவி, மக்கள், மகன்கள் இருப்பதாகவும், மனிதர்களின் பாவமீட்சிக்காக கடவுளே இவ்வுலகில் அவதாரம் எடுத்தார் என்றும் நம்பப்படுகின்ற மதங்களில் நம்பிக்கையிழந்த பிற மத சகோதர, சகோதரிகள் ஒரே இறைவனை வழிபடும் சத்தியமார்க்கம் எது என்று தேடும் போது இஸ்லாம் என்ற பெயரில் இன்று தோன்றியிருக்கும் பற்பல வழிதவறிய கொள்கைகளைப் பார்த்துவிட்டு இந்த வழிகெட்ட கொள்கைகளுக்கு நாம் தற்போதிருக்கும் கொள்கை எவ்வளவோ மேல் என்று கருதி தங்களின் தவறான கொள்கைகளிலேயே நிலைத்துவிடுகின்றனர்.

சடங்கு சம்பிரதாயங்களையும் மூட நம்பிக்கைகளையும் அறவே இல்லாமல் ஒழித்துக் கட்ட ஆணையிடும் இஸ்லாமிய மார்க்கத்திலேயே மாற்று மதத்தவர்களின் மூட நம்பிக்கைகளையும், பல தெய்வ வணக்கமுறைகளையும் மிஞ்சிவிடும் அளவிற்கு புதுப் புது அனாச்சாரங்களையும், ஊருக்கு ஒரு தர்ஹாவையும், தரீக்காக்கள், ஸூஃபியிசம், காதியானிய்யா, அஹ்மதிய்யா, ஷியாயிசம் இது போன்ற பற்பல பிரிவுகளையும் இஸ்லாத்தில் தோற்றுவித்திருக்கின்றனர்.

இதன் மூலம் தாமும் வழிகெட்டுப்போவதோடு பிறரையும் வழிகெடுப்பதுடன் பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றி தவறான அபிப்பிராயம் கொள்வதற்கும் காரணமாக இருக்கின்றனர்.

இதற்கு உதாரணமாக கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்திலிருந்து இஸ்லாம் மார்க்கத்தை தழுவிய சகோதரர் ரியாஸ் பீட்டர் அவர்களின் சத்தியத்தேடலின் சரிதையைக் கூறலாம். ஒரே இறைவனை வணங்குகிறோம் என்று கூறிக்கொண்டே மூன்று கடவுள்களை வணங்கும் தங்களின் கத்தோலிக்க கிறிஸ்தவ மார்க்கத்தில் நம்பிக்கையிழந்த அவர் உண்மையான ஒரே இறைவனை வணங்கும் சத்தியமார்க்கம் எது என்று தேடியலைந்த போது அவருக்கு கண்ணில் பட்டது இஸ்லாம்.

ஆனால் உண்மையான இஸ்லாமிய மார்க்கத்தை தழுவுவதற்கு முன்னர் இவர் வழிதவறிய கொள்ளையுடைய ஸூஃபியிஸம், தப்லீக் ஜமாஅத், தரீக்காக்கள் போன்ற இயக்கத்தவர்களைச் சந்தித்து அவர்களிடம் உரையாடிய போது இவர்களின் மார்க்கத்தைவிட தமது மார்க்கமே மேலானதாக தமக்குத் தோன்றியதாக தமது முறிந்த சிலுவை என்ற நூலில் கூறுகிறார்.

ரியாஸ் பீட்டர் கூறும் போது, தாம் முதலில் சந்தித்த ஸூஃபியிஸக் கொள்கையுடையவர்கள், ‘முஹம்மது நபி (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் ஒளியில் இருந்து வந்தவர்’ என்று கூறியதாகவும் கிறிஸ்தவர்கள் இயேசு நாதரை வணங்குவதைப் போல் முஹம்மது நபி (ஸல்) அவர்களை கடவுள் ஸ்தானத்திற்கு அளவுக்கு மீறி புகழ்வதாகவும் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், “தாங்கள் தங்களின் பாதிரிமார்களை பாவங்களை மன்னிக்கும் ஆற்றலுள்ளவராக நினைத்து அவரின் புகழ்பாடுவதுபோல் இந்த ஆன்மீகவாதிகளும் தங்களின் செய்ஹூவின் புகழ்பாடுகின்றனர்! இவர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் என்ன வித்தியாசம்?” என்று கேட்கிறார்.

சத்திய மார்க்கத்தை அடைந்தே தீரவேண்டும் என்ற உறுதியுடன் உண்மையான இஸ்லாத்தை தேட ஆரம்பித்த இவருக்கு அடுத்ததாக கிடைத்த கொள்கையோ தப்லீக் ஜமாஅத். இந்த இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் இவரை தங்களின் மர்கஸ் ஒன்றிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்குள்ளவர்கள் மார்க்க போதனை செய்கின்றோம் என்ற பெயரில் பெரியார்கள் புராணங்கள் பாடியிருக்கிறார்கள். அதாவது அந்தப் பெரியார் அப்படி செய்தார்! இந்த மஹான் இப்படிச் செய்தார்! “பார்த்தீர்களா அவர்கள் செய்த அமல்களின் சிறப்புகளை” என்று எவ்வித ஆதாரமும் இல்லாமல் கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டிருக்கின்றார்கள்.

ரியாஸ் கான் அவர்களோ தமது கிறிஸ்தவ மார்க்கத்தில் தான் ஆதாரமற்ற கட்டுக்கதைகளை நம்ப வேண்டுமென்றால் இங்கேயுமா என்று குழம்பியிருக்கின்றார். ஒரு சமயம் இந்த பிரிவும் தவறான கொள்கையுடையதாக இருக்குமோ என்ற எண்ணத்தில் தமது சத்திய வேட்கையைத் தொடர்ந்திருக்கிறார்.

இவ்வாறு இஸ்லாம் என்ற பெயரில் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து சின்னாபின்னமாகி தங்களை ஆன்மீகவாதிகள் என்று கூறிக்கொள்ளும் பலர்களை சந்தித்தாக கூறும் இவர் ஒரு கட்டத்தில் முஸ்லிம்களால் பெரிதும் மதிக்கக்கூடிய ஒரு பெரிய ஆன்மீக குருவைப் பார்த்து தாம் அதிர்ச்சியடைந்ததாகக் கூறுகிறார். காரணம் தனது தந்தை மிகப் பெரிய ஆயராக இருக்கும் கிறிஸ்துவ ஆலயத்திற்கு இந்த முஸ்லிம்களின் ஆன்மீக குரு அடிக்கடி வந்து கிறிஸ்தவர்களுக்கு உரை நிகழ்த்தி, “நீங்கள் இருக்கும் மார்க்கம் தான் உண்மையான மார்க்கம்! இதை இயேசு கிறிஸ்துவே தன்னிடம் கனவில் வந்து சொன்னார்” என்று கூறி கிறிஸ்தவர்களை அவர்களின் மார்க்கத்தில் உறுதியாக இருப்பதற்கு ஆர்வமூட்டி விட்டுச் சென்றிருப்பதாகக் கூறுகிறார்.

அது மட்டுமல்லாமல் முஸ்லிம்களிடத்தில் ஆன்மீக குருவாக வேடமிட்டுக் கொண்டிருக்கும் அந்த மஹான் பல கிறிஸ்தவ மிசனரிகளோடு நெருங்கிய தொடர்பு வைத்திருப்பவர் என்றும் வெளிநாட்டில் உள்ள கிறிஸ்தவ மிசனரிகள் அவரின் ‘சேவையைப் பெரிதும்’ பயன்படுத்திக் கொண்டு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதாகக் கூறுகிறார். அதாவது,

– முதலில் இஸ்லாத்தின் கொள்கைகளில் மாற்றம் ஏற்படுத்தி பலரை அதன் மூலம் வழிகேட்டில் ஆக்குவது

– இரண்டாவது முஸ்லிம்களிடத்தில் பெரும் மதிப்பும் அந்தஸ்தும் உள்ள ஒரு ஆன்மீக குரு ஒருவரை கிறிஸ்தவ

தேவாலயங்களில் உரை நிகழ்த்த வைத்து அவரையே ‘உங்களின் கிறிஸ்தவ மார்க்கம் தான் உண்மையான மார்க்கம்’ என்று கூற வைப்பதன் மூலம் கிறிஸ்தவ மதத்தில் சந்தேகம் கொண்டு முஸ்லிமாக மாறவேண்டுமென்ற சத்தியவேட்க்கையுடைய கிறிஸ்தவர்களையும் தங்களின் மார்க்கத்திலேயே தக்க வைத்துக்கொள்வது.

இவர் போன்ற இன்னும் சில போலி ஆண்மீக வாதிகளைச் சந்தித்ததாகக் கூறும் ரியாஸ் பீட்டர் கூறுகையில், ‘இறைவா! எனக்கு வழிகாட்டு என்று நான் பிரார்த்தித்துக் கொண்டே இருந்தேன். ஒரு கட்டத்தில், இனிமேலும் யாராவது நல்லறிஞர் கிடைத்து இஸ்லாத்தைப் பற்றிய சரியான வழிகாட்டுதலை வழங்காவிட்டால் என்னுடைய ஆராய்ச்சிகளை எல்லாம் மூட்டைகட்டி வைத்துவிடுவது என்கிற முடிவு பண்ணிக்கொண்டேன். ஆனால் அல்லாஹ்வின் நாட்டம் வேறு மாதிரி இருந்தது’ என்று கூறுகிறார்.

இவரின் தொடர்ந்த முயற்சியினால் அல்லாஹ் அவருக்கு ஹிதாயத் என்னும் சத்திய நேர்வழியைக் காட்டியிருக்கிறான். ஆம் இறுதியில் குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளைப் பின்பற்றக்கூடிய உண்மையான முஸ்லிம்களைச் சந்தித்து பிறகு தாம் இஸ்லாத்தை தழுவியதாகக் கூறுகிறார்.

இவர் தன்னுடைய முறிந்த சிலுவை என்னும் நூலில் கூறுகையில், “வாழ்வின் அனைத்து பகுதிகளுக்கும் வழிகாட்டுகின்ற ஒரு முழுமையான நெறிமுறையாக இஸ்லாம் உள்ளது. ஆனால் துரதிருஷ்டவசமாக இன்று பெரும்பாலான முஸ்லிம்கள் தனிநபர் வழிபாடு, பொருளாசை, பிரிவினைவாதம், போன்ற புரை சேற்றில் மூழ்கி சீரழிந்துக் கொண்டுள்ளார்கள். இஸ்லாம் என்பதோ சடங்கு சம்பிரதாயங்களின் தொகுப்புக் கூடாரம் அல்ல! அது முழுமை பெற்ற வாழ்வியல் கொள்கை! குர்ஆன், ஹதீஸ் இவ்விரண்டின் மீது மட்டுமே அது நிலை கொண்டுள்ளது என்பதை நான் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

முஸ்லிம்களைப் பார்த்து இஸ்லாத்தைத் தழுவுவதாக இருந்தால் நான் விரக்தியே அடைந்திருப்பேன்! இஸ்லாத்தை நான் மனிதர்களைப் பார்த்து கற்றுக்கொள்ளவில்லை. அதன் போதனைகள் மற்றும் நன்னெறிகளைப் பார்த்தே ஏற்றுக்கொண்டேன்! அதற்காக அல்லாஹ்வுக்கு பெரிதும் நன்றி செலுத்துகிறேன்” என்று கூறுகிறார்.

எனவே எனதருமை சகோதர சகோதரிகளே! குர்ஆன் மற்றும் நபிவழியில் இல்லாத புதிய புதிய வணக்க விழிமுறைகளை இஸ்லாத்தில் நுழைப்பதன் மூலம் மார்க்கம் பலவாறாக சிதைந்துவிடுவதோடல்லாமல்
முஸ்லிம்களிடத்திலும் பலபிரிவுகள் ஏற்பட்டு ஒவ்வொரு பிரிவினரும் தம்தம் கொள்கைகளே சிறந்தது என்று மார்தட்டிக் கொள்ளும் பரிதாபகரமான சூழ்நிலை இன்று ஏற்பட்டிருக்கிறது. இது முஸ்லிம்களின் ஒற்றுமையச் சிதைப்பதோடல்லாமல் இக்கொள்கைகளைப் பின்பற்றக்கூடியவர்கள் குர்ஆன் ஹதீஸ் போதிக்கும் உண்மையான இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றி அறியாதவர்களாக இருக்கின்றனர்.

இந்த தொடர் கட்டுரையின் நோக்கம் என்னவெனில் சத்தியமார்க்கத்தை தேடும் ரியாஸ் பீட்டரைப் போன்ற சகோதர, சகோதரிகளுக்காக கிறிஸ்தவ மிஷனரிகளால் திட்டமிடப்பட்டு ஆன்மீகம் என்ற பெயரில் இஸ்லாத்தில் ஊடுருவியிருக்கும் போலிகளை வெளிச்சம் போட்டுக்காட்டுவதற்காகவும் மார்க்கம் என்றால் என்னவென்றே அறியாமல் இத்தகைய போலிகளின் கைகளில் சிக்குண்டு இருக்கும் முஸ்லிம்களுக்கு தாங்கள் சார்ந்த கொள்கைகள் இஸ்லாத்திற்கு எவ்வாறெல்லாம் முரண்படுகின்றது என்பதை விளக்குவதற்காகவும் இந்தக் கட்டுரைத் தொகுப்பு வெளிவர இருக்கிறது.

அல்லாஹ் இந்த நோக்கத்தை நிறைவேற்றித் தந்து இதன் மூலம் பலருக்கு நேரியவழிகாட்டுமாறு வேண்டுகிறோம். ஆமீன்.

வழிதவறிய கொள்கைகள் – பாகம்-2 : பரேல்விய்யா!

தொடர்பான கட்டுரைகள்: –

1) முஸ்லிம்களிடத்தில் பிரிவினைகள் ஏற்படக் காரணம் என்ன?
2) பித்அத் என்றால் என்ன?

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...
One thought on “வழிதவறிய கொள்கைகள் – முன்னுரை”
  1. //சத்திய மார்க்கத்தை அடைந்தே தீரவேண்டும் என்ற உறுதியுடன் உண்மையான இஸ்லாத்தை தேட ஆரம்பித்த இவருக்கு அடுத்ததாக கிடைத்த கொள்கையோ தப்லீக் ஜமாஅத். இந்த இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் இவரை தங்களின் மர்கஸ் ஒன்றிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.//
    Assalamu alaikum wa rahamathullahi wa barakathu hu

    masha Allah nalla pathivugal, Allah menmelum thangal pathivugalai anaivarudaya hidhaya vitkku kaaranamakkuvaanaha, athey pole riyas peeter avargalukku melum melum islathai thedi purinthu vaala arul purivaanaha,
    ennudaya karuthu ennavendral, ootharanamaha ennaiye eduthu kolhiren Allah paathuhaakka vendum, naan muslim vayitril pirantha muslim allatha oru vaalkail irunthavan aanal indru oru unmai muslim aavarthukku muyarchi seyum muslim, insha allah muslim aaha ennai allah etru kollvaanaha, muslim aahiveduven, intha muyarchikku kaaranam allathu thoondiyathu ethuvendral thabliq jamath thaan nanbarey, neengal solvathu pola ennai ondrum kulappavillai thelivaaha thaan iruthathu, athartkaha naan ondrum aatharamattra hadees galai pin batrubavan alla, allah enakku kodutha pahutharivai ubayohippavan alhamdu lillah,
    athey pole ethai vendumanalum sonnabadi yelleam amal seyanum endru thavaruhalaiyum hadeesukku purambaha seyavum illai, intha thelivugal enakku thabliq il thaan kidaithathu sahothararey
    anathum vialnga vendum vilanga muyarchikka vendum, mumingalai krai solla vendam, allah namakku natkooli tharuvaanaha,

    masha allah thangalin pathivugal aakangal arumai
    vassalam

    Abubakkarsithik

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed